நண்பர்களே ஜாதியை கையில் பிடித்து திரியும் வருங்கால வாலிபர்களே பழைய வரலாறை மட்டும் வைத்து கொண்டு நாம் வாழ முடியாது என்பதுதான் உண்மை காலத்தின் கட்டாயம் ,,இதை நாம் முதலில் புரிந்து உணர வேண்டும் வரலாறையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதில் நாம் அந்த வரலாறை தெரிந்து பெருமை பேசிகொண்டு இருபதனால் பெரிய மாற்றம் உண்டு பண்ணுவதில்லை அந்த வரலாறை நாம் கருத்தில் கொண்டு ,அதன் அடிபடையில் போராட வேண்டும் அதை விடுத்து வரலாறை மட்டும் பேசி ஒரு பயனும் அல்ல அன்று நம் முப்பாட்டன் செய்த சாதனையை நாம் செய்ய இயலவில்லையே என்று நாம் நொந்து கொண்டு தலைகுனிந்து வாழ்கிறோம் என்பதுதான் உண்மை அப்படி நம் ஒரு கேடுகட்ட வாழ்கை வாழும் போது நம் முப்பாட்டன் பெருமை பேசுவது நம் இயலாமை மட்டும் அல்ல அவர்கள் பெருமையும் நாம் கெடுக்கிறோம் என்பதுதான் சரி {எடுத்துகாட்டு நல்ல தகப்பனார் தன் தறுதலை மகனை பார்த்து என் மகன் என்று சொல்லி எனது நல்ல பெயரை கெடுக்காத என்று சொல்லும் பல தகப்பனார் போல நம் முப்பாட்டன்கள் இன்று இருந்தாலும் அவர்கள் இதை தான் சொல்லிருபார்கள் } அப்படியே என் ஜாதியை விட்டு கொடுக்க முடியாது ஆனால் தமிழ் மொழி , தமிழ் மக்கள் இவர்களுக்காக போராடுவோம் என்று சொல்வது பாம்பு என்னிடம் விஷம் இல்லை என்று சொல்வது போல் ஆகிவிடும் , அப்படியே ஜாதி விடவே மாட்டோம் ஆனால் தமிழ் மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் போராடுவோம் என்று சொல்லும் நண்பர்களே , உன் ஜாதியில் 1 கோடி மக்கள் தொகை இருக்கிறார்கள் என்றால் அதில் 60 % மக்களை போராட்டத்தில் ஈடுபட்டால் நன்றாக இருக்கும் ஒருநாள் அரசியல் அல்லாத சாதிய மக்கள் சாலைக்கு வந்து போராடுவார்களா ஒருநாள் தலித் மக்கள் , ஒருநாள் வன்னியர் , ஒருநாள் ,தேவர் , ஒருநாள் பிள்ளை , ஒருநாள் செட்டியார் , இது போன்று பல ஜாதிகள் பல கோடிகளாக இருக்கும் போது ,,,ஒருநாளும் அது நடக்க வில்லை ஒவ்வொரு ஜாதிலும் அடிதட்ட மக்கள் தான் போராடுகிறார்கள் என்பதை மறக்க வேண்டாம் ஒவ்வொரு ஜாதி பணகார வர்க்கம் போராட்டத்தில் ஈடுபட என்ன வழி என்று பாருங்கள் , மேலே சொன்ன அத்தனை ஜாதியும் என்று சிலை உடைக்கும் பழக்கத்தை விடுகிறார்களோ அன்று தமிழ் சமுதாயதிற்கு ஒரு நல் வழி வரும் என்பதை நான் அறிவேன் , ஒரே ஜாதி அதே ஜாதி பற்றி தவறாக பேசினால் அது தவறு இல்லை ,,ஆனால் வேற ஜாதி காரன் வேறு ஜாதி பற்றி பேசக்கூடாது என்று சொன்னால் நாம் இன்றும் தெளிவு அடையவில்லை என்றுதான் நினைக்கவேண்டியுள்ளது ,,,( ப . சிதம்ரம் , நாராயண சாமி ) இவர்கள் தமிழனுக்கு எதிராக செயல் படுகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும் அது போன்ற சில ஆட்களை நாம் ஒதுக்க வேண்டும் என்று சொன்னால் அதை அவர்கள் ஜாதி சேர்ந்த நண்பர்களும் ஏற்று கொள்கிறார்கள் , என் ஜாதி சேர்த்தவனை நீ எப்படி ஒதுக்க வேண்டும் என்று சொன்னாய் என்று கேக்க வரும் போது அது தான் தமிழ் தேசியத்தை மண்ணில் போட்டு புதைத்து விடும் அது போன்ற சில நபர்களால் ) குரங்கில் இருந்து நாம் வந்தோம் என்று ஒப்பு கொள்கிறோம் ஆனால் அந்த குரங்கை நாம் என்றாவது ஏற்று கொண்டுவிட்டமா , அப்படி என்றால் இன்று நாம் வசிக்கும் இடம் பல வருடத்திற்கு முன்பு அரசர் வருவதற்கு முன்பு இந்த இடத்தில என் முப்பாட்டன் இருந்தான் என்று சொல்லிக்கொண்டு இன்று காட்டில் வாழும் காட்டு வாசி தோழர்கள் வந்து கேட்டால் நம் விட்டு விட்டு போய்விடுவோம ? நம் வரலாறை வைத்து கொண்டு இன்று இப்படி பேசிகிறோம் காட்டு வாசிக்கு சரியான வரலாறு இல்லாதனாலும் தோற்று போனதாலும் இன்று நம் வரலாறு சொல்லி பெருமை பட்டு கொள்கிறோம் ,,எப்படியோ நம் மக்கள் ஜாதியை நோக்கி மட்டும் சென்று கொண்டு இருகிறாக்கள் என்று நினைக்கும் போது ,,வேதனையில் வெந்து போகவேண்டியுள்ளது பிழை இருக்கும் பிழையோடு படித்தால் பிழை ஆகிவிடும்
No comments:
Post a Comment